×

ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் கோயில் நிலம் மீட்பு

 

ஜெயங்கொண்டம், மார்ச் 15: ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலம் நேற்று போலீசார் உதவியுடன் மீட்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் சுமார் 3 ஏக்கர் 44 சென்ட் நிலங்கள் குருவாலப்பர் கோயில் வருவாய் கிராமத்திற்கு உட்பட்டு இருந்தது.

இந்த நிலங்களை நேற்று போலீசார் உதவியுடன் இந்து சமய அறநிலையத்துறை கங்கைகொண்ட சோழபுரம் கோயில் செயல் அலுவலர் செந்தமிழ் செல்வி உள்ளிட்டோர் மீட்டு அளவீடு செய்து இந்த இடம் கோயிலுக்கு சொந்தமானது. இது விரைவில் கோயில் நிர்வாகத்தின் மூலம் வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு ஏலம் விடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் அந்நியர்கள் அனுமதியின்றிவாகனங்கள் நிறுத்துவதோ உள்ளே பிரவேசிக்கவோ கூடாது மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாகத்தினர் பெயர் பலகை வைக்கப்பட்டது.

The post ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் கோயில் நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Ganga Konda Cholapuram temple ,Jeyangondam ,Jayangkondam ,Gangaikonda ,Cholapuram Pragatheeswarar temple ,Ariyalur District ,Ganga Konda Cholapuram Pragatheeswarar temple ,Jayangondam ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே மது விற்ற இருவர் கைது