அப்போது வீட்டில் உள்ள ஒரு அறை வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் கதவை திறந்தார். அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஆறுமுகத்தை எழுப்பி சொர்ணலதா குறித்து பாட்டி கேட்டார். பின்னர் அவர்கள் 2 பேரும் சொர்ணலதா அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு அவர் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்து ஆறுமுகம் மற்றும் பாட்டி அழுது புலம்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சொர்ணலதா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியவில்லை என்றும் இன்னும் 2 நாளில் சென்னைக்கு குடிபோக திட்டமிட்டிருந்ததாகவும் ஆறுமுகம் தெரிவித்தார். திருமணமான 21 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்திருப்பது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
The post சென்னைக்கு தனிக்குடித்தனம் போக திட்டமிட்ட நிலையில் கணவரை அறையில் பூட்டிவிட்டு புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை: திருமணமான 21 நாளில் சேலத்தில் சோகம் appeared first on Dinakaran.