×

அதிமுகவில் உறுப்பினராக இல்லாத ஓ.பி.எஸ். தனது எக்ஸ் தளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டுள்ளார்: ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி புகார்

சென்னை: அதிமுகவில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்ய தாமதமானத்தினால், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்து தனி நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தனி நீதிபதி முடிவெடுக்க உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி வாதிட்டார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தனது எக்ஸ் தளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டுள்ளதாக புகார் தெரிவித்தார்.

அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளே இல்லை என்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத ஓபிஎஸ், தன்னை இன்னும் ஒருங்கிணைப்பாளர் என கூறி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கைகளில் தலையிடுவது தேவையற்ற குழப்பத்தை தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். எடப்பாடி தரப்பு வாதம் முடிந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு வாதத்துக்காக வழக்கை மார்ச் 12க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post அதிமுகவில் உறுப்பினராக இல்லாத ஓ.பி.எஸ். தனது எக்ஸ் தளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டுள்ளார்: ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி புகார் appeared first on Dinakaran.

Tags : OPS ,AIADMK ,Edappadi Palaniswami ,ICourt ,Chennai ,O. Panneerselvam ,General ,Madras High Court ,Dinakaran ,
× RELATED திரைமறைவில் நடக்கும் ரகசிய...