×

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் ஆலோசனை தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக, அதிமுக புகார்: பிற்பகலில் அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னையில் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது திமுக, அதிமுக மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் ஆணையத்தில் பல்வேறு புகார்களை தெரிவித்தனர். நாடாளுமன்றத்துக்கு வருகிற மே மாதத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். இதனால் மார்ச் மாத தொடக்கத்தில் தேர்தல் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு ஏதுவாக தேர்தல் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. இதற்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் என பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டன. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தும் வேலைகளில் இந்திய தேர்தல் ஆணையம் தற்போது தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டது.

மாநிலங்களில் கடந்த 30ம் தேதியுடன் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை மாறுதல் செய்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மாநில அரசுகள் அனைத்தும் பணி மாறுதல்களை செய்துள்ளது. இந்தநிலையில் கடந்த 6 மற்றும் 7ம் தேதி தமிழக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் சென்னையில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையை தொடர்ந்து தமிழகத்தில் எந்த தேதியில், எத்தனை கட்டமாக தேர்தல் நடத்துவது என்பது குறித்து கருத்து கேட்பதற்காகவும், தேர்தல் பணிகள் மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காகவும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு சென்னை வந்தடைந்தார்.

அவருடன், தேர்தல் ஆணையர் அருண் கோயல், மூத்த துணை தேர்தல் ஆணையர்கள் தர்மேந்திர சர்மா, நிதிஷ் வியாஸ், துணை தேர்தல் ஆணையர்கள் அஜய்பாது, மனோஜ்குமார் சாகு, முதன்மை செயலர் மலேய் மாலிக் மற்றும் உயர் அதிகாரிகள் நாராயணன், அனுஜ் சந்தக் ஆகியோரும் வந்துள்ளனர். சென்னை விமான நிலையத்திற்கு எதிரே உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 10 மணியளவில் தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்தினார்.

அதன்படி, திமுக, அதிமுக, பாஜக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தனித்தனியாக தலா 9 நிமிடங்கள் வரை நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான ஆலோசனை மற்றும் அவர்களின் கருத்துகளை ராஜீவ்குமார் கேட்டறிந்தார். அதில், திமுக சார்பில், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ, கிரிராஜன் ஆகியோர் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ்குமாரை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் வித்தியாசம் என்னவென்று கேட்டால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும், கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும் இடையில் தற்போது விவிபேட் இயந்திரத்தை நடுவில் கொண்டு வந்து வைக்கும் என்ற புது நிலையை கொண்டு வந்திருக்கிறார்கள். இது சட்டத்திற்கு புறம்பானது. பொதுமக்கள் அளிக்கின்ற வாக்கு நேரடியாக கண்ட்ரோல் யூனிட்டுக்கு போவதுதான் நம்பகத்தன்மையை உருவாக்கும். இடையிலே ஒரு விவிபேட் வைத்து, அதுவும் வாக்கு எண்ணும்போது விவிபேட்டில் உள்ள வாக்குகளை 100 சதவீதம் பார்க்க முடியாது, எண்ண முடியாது என்று சொல்வது மிகப்பெரிய தவறு, இது சந்தேகத்தை உருவாக்குகிறது.

அதோடு மட்டுமல்ல, தேர்தல் ஆணையமே இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றினால் ஒன்றில் இருந்து 2 சதவீதம் வரை தவறு நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள். அப்படி ஒத்துக்கொள்கின்றபோது, ஒரு நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 சதவீதம் என்றால் ஏறத்தாழ 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வாக்குகள்கூட வர இருக்கிறது. இந்த வாக்கு என்பது ஒரு தொகுதியினுடைய வெற்றியை எந்தளவுக்கு நிர்ணயிக்கக்கூடியது என்பதை எல்லோரும் அறிந்த ஒன்று. ஆகவே, இதுபோன்று உள்ளதையெல்லாம் மாற்றி அமைக்க வேண்டும்.

கட்சிகளுக்கு உள்ள இதுபோன்ற பிரச்னையை மாற்ற தேர்தல் ஆணையம் இதுவரை திருப்திகரமான பதில் எதுவும் சொல்லவில்லை. அதேபோல எதற்கெடுத்தாலும் இங்கே கொடுக்கப்படுகின்ற மனுக்களை மத்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி தான் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையை மாற்றி, எளிமைபடுத்துகிற வகையில் மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரத்தை கொடுத்து, கொடுக்கப்படுகிற புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 15 பக்க மனுவை இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் கொடுத்திருக்கிறோம். தேர்தல் எத்தனை கட்டங்களாக நடத்தினாலும் அதை சந்திக்க சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் வித்தியாசம் என்னவென்று கேட்டால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும், கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும் இடையில் தற்போது விவிபேட் இயந்திரத்தை கொண்டு வந்து வைக்கும் என்ற புது நிலையை கொண்டு வந்திருக்கிறார்கள். இது சட்டத்திற்கு புறம்பானது. பொதுமக்கள் அளிக்கின்ற வாக்கு நேரடியாக கண்ட்ரோல் யூனிட்டுக்கு போவதுதான் நம்பகத்தன்மையை உருவாக்கும். இடையிலே ஒரு விவிபேட் வைத்து, அதுவும் வாக்கு எண்ணும்போது விவிபேட்டில் உள்ள வாக்குகளை 100 சதவீதம் பார்க்க முடியாது, எண்ண முடியாது என்று சொல்வது மிகப்பெரிய தவறு, இது சந்தேகத்தை உருவாக்குகிறது. அதோடு மட்டுமல்ல, தேர்தல் ஆணையமே இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றினால் ஒன்றில் இருந்து 2 சதவீதம் வரை தவறு நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

அப்படி ஒப்புக்கொள்ளும்போது, ஒரு நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 சதவீதம் என்றால் ஏறத்தாழ 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வாக்குகள்கூட வர இருக்கிறது. இந்த வாக்கு என்பது ஒரு தொகுதியினுடைய வெற்றியை எந்தளவுக்கு நிர்ணயிக்கக்கூடியது என்பதை எல்லோரும் அறிந்த ஒன்று. ஆகவே, இதுபோன்ற குறைகளையெல்லாம் மாற்றி அமைக்க வேண்டும். கட்சிகளுக்கு உள்ள இதுபோன்ற பிரச்னையை மாற்ற தேர்தல் ஆணையம் இதுவரை திருப்திகரமான பதில் எதுவும் சொல்லவில்லை.

அதேபோல எதற்கெடுத்தாலும் இங்கே கொடுக்கப்படுகின்ற மனுக்களை மத்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி தான் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையை மாற்றி, எளிமைபடுத்துகிற வகையில் மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரத்தை கொடுத்து, கொடுக்கப்படுகிற புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 15 பக்க மனுவை இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் கொடுத்திருக்கிறோம். தேர்தல் எத்தனை கட்டங்களாக நடத்தினாலும் அதை சந்திக்க திமுக தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வக்கீல் பாபு முருகவேல் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நியாயமான, அமைதியான, ஜனநாயக முறையில், விருப்பு வெறுப்பின்றி நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் முழுமையாக களையப்பட வேண்டும். இறந்தவர்கள், வீடு மாறியவர்கள் பெயர் இன்னும் வாக்காளர் பட்டியலில் மாறவில்லை. தகுதியுள்ளவர்கள் சேர்க்கப்பவில்லை. ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் பல வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்கும்நிலை உள்ளதை, களைய வேண்டும்.

தமிழ்நாட்டில் பதட்டமான வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் கண்டறியப்பட வேண்டும். அந்த மையங்களில் கூடுதல் துணை படை, சிசிடிவி கேமரா ,சுதந்திரமாக தேர்தல் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வீரர்களை போட வேண்டும். உள்ளூர், மத்திய, துணை ராணுவம் பயன்படுத்தப்படுத்தகிறது. துணை ராணுவ வீரர்களை அதிகளவில் போட்டு சுதந்திரமாக மக்கள் ஓட்டுபோட ஏற்பாடு செய்ய வேண்டும். துணை ராணுவ படை அதிகம் பேரை தேர்தலுக்கு வரவழைக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலுக்கு முன் கலெக்டர்கள், எஸ்பி முதல் கீழ்மட்டம் வரை அதிகாரிகளை மாற்ற வேண்டும்.

சிறையில் உள்ள குற்றவாளிகளால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை உள்ளது. அவர்களை கண்டறிந்து, கண்காணிப்பில் வைத்து நியாயமான தேர்தல் நடத்த வேண்டும். கடுமையான கோடை காலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் வாக்குச்சாவடி மையங்களில் தண்ணீர், துணிபந்தல் போட வேண்டும். தேர்தல் பார்வையாளர்களாக வெளிமாநிலத்தில் இருக்கிறவர்களை பயன்படுத்த வேண்டும் என்றார்.

இதேபோல மற்ற கட்சிகளின் நிர்வாகிகளும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். அரசியல் தலைவர்களுடன் நடத்திய கூட்டத்தைத் தொடர்ந்து, பிற்பகலில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் ஏற்பாடுகள் எந்த அளவில் தயார் நிலையில் உள்ளது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். நாளை காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 1 மணிவரை வருமான வரி துறை, வருவாய் புலனாய்வு துறை, சுங்கத் துறை, அமலாக்கத் துறை, சிஆர்பிஎப், ஆர்பிஎப், சிஐஎஸ்எப், ஜிஎஸ்டி போன்ற அமலாக்க முகமைகளின் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து, பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணி வரை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோருடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் ஆலோசனை தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக, அதிமுக புகார்: பிற்பகலில் அதிகாரிகளுடன் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Election Commissioner ,Chennai ,Adimuka ,Rajiv Kumar ,Tamil Nadu ,Dimuka ,Election Commission ,Dinakaran ,
× RELATED அதிமுக – பாஜக மறைமுக கூட்டணி என்ற...