×

தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு 2000 டன் நெல் மூட்டைகள் அரவைக்காக அனுப்பிவைப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 2000 டன் நெல் அரவைக்காக மதுரைக்கு சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

The post தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு 2000 டன் நெல் மூட்டைகள் அரவைக்காக அனுப்பிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Madurai ,Thanjavur district ,Tamil Nadu ,
× RELATED திருமலைசமுத்திரம் பகுதிகளில் மரவள்ளி...