×

தனியார் ஊழியரிடம் ₹18.34 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி, பிப்.22: குறைந்த முதலீட்டிற்கு அதிக லாபம் தருவதாக கூறி, தனியார் நிறுவன ஊழியரிடம் ₹18.34 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து, சைபர் கிரைம் போலீசாaர் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி கோ-ஆப்ரேட்டிவ் காலனி 4வது தெருவைச் சேர்ந்தவர் விமல் (34), தனியார் நிறுவன ஊழியர். இவரது வாட்ஸ் அப்பிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் குறைந்த முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதை உண்மை என நம்பிய விமல், பல்வேறு தவணைகளில் அந்த குறுந்தகவலில் வந்த வங்கி கணக்கிற்கு ₹18.34 லட்சம் பணத்தை செலுத்தினார். அதன்பிறகு அவருக்கு லாபமும், முதலீடு செய்த பணமும் திரும்ப கிடைக்கவில்லை. அந்த வாட்ஸ்அப் நம்பரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post தனியார் ஊழியரிடம் ₹18.34 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Colony 4th Street… ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி வனக் காவலர் காயம்