மா.கம்யூ. கட்சி உடனான கூட்டணியை முடிவுக்கு கொண்டு வராமல், காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு பற்றி யோசிக்க தேவையில்லை. மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு என்பது காங்கிரசின் நிலைப்பாட்டை பொறுத்தே அமையும். காங்கிரஸ் – திரிணாமுல் காங்கிரஸ் இடையிலான விரிசலுக்கு மா.கம்யூ. கட்சி தான் காரணம். எனவே வரும் லோக்சபா தேர்தலில் மேற்குவங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். மேற்குவங்காளத்தில் மா.கம்யூ. – காங்கிரஸ் இடையே கூட்டணி உள்ளது. மா.கம்யூ. கட்சியை பொறுத்தமட்டில், அந்த கட்சியானது ஒரு பயங்கரவாத அமைப்பு. திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை மா.கம்யூ கட்சியினர் காயப்படுத்தியதை மறக்கமாட்டேன்’ என்றார்.
The post மா.கம்யூ உறவை முடிவுக்கு கொண்டு வராமல் காங்கிரசுடன் கூட்டணி வைக்க முடியாது: மம்தா பானர்ஜி திடீர் அறிவிப்பு appeared first on Dinakaran.