இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா சார்பில் ஜடேஜா, அஸ்வின் தலா 3 விக்கெட்டும், அக்சர் படேல், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான துவக்கத்தை கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்களை சேர்த்த நிலையில், ரோகித் சர்மா 24 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை குவித்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 76 ரன்களுடனும், சுப்மன் கில் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
The post இந்தியா-இங்கிலாந்து போட்டி முதல் நாள் ஆட்டம் நிறைவு: வலுவான நிலையில் இந்திய அணி.! அதிரடி காட்டிய இளம் வீரர் ஜெய்ஸ்வால் appeared first on Dinakaran.