இந்நிலையில் எண்ணெய் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. எண்ணெய் கசிவு தொடர்பாக தாமாக முன்வந்து பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்த வழக்கில் மீன்வளத்துறை விளக்கம் அளித்துள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.7500 வீதம் 6,700 குடும்பங்களுக்கு வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.7500 வழங்க 5 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் கசிவால் சேதமடைந்த 787 படகுகளுக்கு தலா உ.10,000 நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது இவ்வாறு கூறியுள்ளது.
The post எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம்: மீன்வளத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.