கடையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். பின்னர், கையில் கத்தியுடன் அராஜகம் செய்த அந்த கும்பல் உரிமையாளரை மிரட்டி ரூ.1000 பணம் பெற்று சென்றனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சுங்கவார் சத்திரம் போலீசார் நரசிங்கப்புரத்தை சேர்ந்த பாபா என்ற வினோத் குமார் மற்றும் அபிமன்யூ ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள சரித்திர பதிவேடு ரவுடி முகேந்தர் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post சென்னையை அடுத்து பேக்கரி ஒன்றில் உரிமையாளரை ரூ.1000 கேட்டு மிரட்டிய ரவுடி கும்பல்.. இணையத்தில் வெளியான காட்சியால் இருவர் சிக்கினர்..!! appeared first on Dinakaran.