×

மழைநீரால் பாதிப்பு தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

 

சென்னை: மழைநீரால் பாதிப்படைந்துள்ள தொழில் நிறுவனங்களுக்கான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: மிக்ஜாம் புயல் காரணமாக கிண்டி, அம்பத்தூர், பெருங்குடி, திருமழிசை, திருமுடிவாக்கம், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மட்டும் ரூ.2000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும், தொழில் வளர்ச்சி மற்றும் தொழிலாளர் நலன் ஆகியவற்றை கருத்தில் கண்டு, தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்ய அரசு முன்வர வேண்டும் என்றும் தொழிலதிபர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தொழிற்பேட்டைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்யவும், வருங்காலங்களில் இதுபோன்ற நிலைமை ஏற்படாமல் இருக்கவும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மழைநீரால் பாதிப்பு தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : O. Panneerselvam ,Chennai ,Dinakaran ,
× RELATED தனியார் சிற்றுந்துகளை...