தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 1 கப்
புளிச்சாறு – 2-3 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – 1 சிறிய துண்டு
தக்காளி – 1
வெங்காயம் – 1
ப்ராக்கோலி – 1
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
கொத்தமல்லி – சிறிது
தாளிப்பதற்கு…
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
வரமிளகாய் – 2
பூண்டு – 2-3 பல்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சாம்பார் தூள் – 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.பின் அதை கழுவி குக்கரில் போட்டு, 2 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், வரமிளகாய், சேர்த்து தாளிக்க வேண்டும்.பின்பு பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.அதன் பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பின் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை கிளறி விட வேண்டும்.பின் அதில் மிளகாய் தூள், சாம்பார் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, ப்ராக்கோலியை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.பிறகு வேக வைத்துள்ள பருப்பு மற்றும் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு நீரை ஊற்றி, குறைவான தீயில் வைத்து, ப்ராக்கோலி வேகும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ப்ராக்கோலி சாம்பார் தயார்.
The post ப்ராக்கோலி சாம்பார் appeared first on Dinakaran.
