![]()
சென்னை: புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை யாரும் வெளியே வர வேண்டாம் என சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர். புயல் தொடர்பாக பரவும் வதந்திகளை நம்பி அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். கடல் அலை அதிகரிப்பு காரணமாக யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவித்துள்ளனர்.
The post புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை யாரும் வெளியே வர வேண்டாம்: சென்னை காவல்துறை வேண்டுகோள் appeared first on Dinakaran.
