அப்போது, தடையில்லா சான்று வழங்க வேண்டுமானால், ரூ.25 ஆயிரத்தை லஞ்சமாக தர வேண்டும் என பேரூராட்சியில் வெங்கடாஜலம் கேட்டுள்ளார். அதன்படி, இளவரசன் ₹25 ஆயிரம் லஞ்சப்பணத்தை நேற்று காலை கொடுத்துள்ளார். ஆனால், அதன் பின்னர் அவர், தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில், இதுகுறித்து புகார் அளித்தார். இதனையடுத்து, நேற்றிரவு 7 மணியளவில், பொ.மல்லாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக புகுந்து சோதனையிட்டனர். மேலும் வெங்கடாஜலத்திடம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது.
அதில் அவர் ₹25ஆயிரம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர். இந்த சோதனையானது நேற்று மாலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை நடைபெற்றது.
The post ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர் கைது appeared first on Dinakaran.