
சென்னை: விண்வெளித்துறையில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உழைப்புக்கான அங்கீகாரமாக கருதி இதை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். சந்திரயான்3 திட்ட இயக்குநராக தமிழ்நாட்டை சேர்ந்த வீரமுத்துவேல் இருந்தது நமக்கு பெருமை என தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
The post விண்வெளித்துறையில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு ரூ.25 லட்சம் பரிசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.