மதுரை: மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் மேலும் 12 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 31 குழந்தைகள் உட்பட 85 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதித்தோரின் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது.
The post மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் மேலும் 12 பேருக்கு டெங்கு பாதிப்பு..!! appeared first on Dinakaran.
