இந்த கருத்தரங்கில், இரு நாட்டு மாணவர்கள், ஆசிரியர்களை பரிமாற்றம் செய்து கொள்வதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் கார்த்திக் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சிலின் தென் இந்தியா இயக்குனர் ஜனக புஷ்பநாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் மூலம் 2 நாடுகளுக்கும் இடையே கல்வி வளர்ச்சிக்கான ஏற்பாடுகளை எப்படி செய்வது? கல்வி உறவுகளை அதிகரிப்பது எப்படி? என்பது பற்றி ஆய்வு செய்ய உள்ளனர். மேலும், இங்கிருந்து மாணவர்கள் பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களுக்கு படிக்கலாம் என்றார்.
The post பிரிட்டிஷ் கவுன்சில், உயர்கல்வித்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் பொன்முடி பேச்சு appeared first on Dinakaran.