வால்பாறை, : வால்பாறை பகுதியில் தொடர்ந்து மூடுபனி நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஆழியாரில் இருந்து வால்பாறை சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. 40 கொண்டை ஊசி வளைவுகள் கொள்ள மலைப்பதையில், அட்டகட்டி முதல் கவர்கல் வரையிலான மலைப்பாதையில் நிலவும் குளிர்ச்சியான கால நிலையும், தற்போது மேக கூட்டங்கள் மலைகளில் படர்ந்த உள்ளதும் கண்ணை கவரும் விதமாக உள்ளது.