இதையடுத்து, அவர் மனுவை திரும்பப் பெற்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு முழுவதும் கோயில் நிலங்கள், அறநிலையத் துறைக்கு தெரியாமல் அறங்காவலர்களால் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்களுக்கு விற்கப்பட்டன. இது சம்பந்தமாக அறநிலையத்துறை விசாரணை நடத்தி, ஆவணங்களை சேகரித்து, நிலங்களை தானம் அளித்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கோயில் சொத்துகளை மீட்க வேண்டும். இதில் பேராசை பிடித்த சிலரின் நிலங்களை வாங்கியவர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனினும் அவர்களுக்கு கருணை காட்ட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post சட்ட விரோதமாக விற்பனையான கோயில் சொத்துகளை மீட்க நடவடிக்கை: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.