சுதந்திர தினத்தை முன்னிட்டு தவ்ஹீத் ஜமாஅத் கட்டுரை போட்டி

 

திருத்துறைப்பூண்டி, ஜூலை 15: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் தெற்கு மாவட்ட தலைவர் யாசர் அரபாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாடெங்கும் இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில் மதவெறுப்பை முறியடிக்கும் நோக்கிலும், மதநல்லிணக்கத்தை வளர்க்கும் வகையிலும், இந்திய சுதந்திரப்போராட்ட த்தில் முஸ்லிம்களின் பங்களிப்பை நினைவு படுத்தும் விதமாகவும் இந்திய விடுதலைக்கு இஸ்லாமியர்கள் பங்கு என்கிற தலைப்பில் கட்டுரை போட்டி ஒன்றை திருவாரூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது. முதல் 3 இடங்களை பிடித்த கட்டுரையாளர்களுக்கு முறையே ஸ்டீல் பீரோ, விசிறி மற்றும் ஸ்டவ் ஆகியவை வழங்கப்படும்.

மேலும் பத்து கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசு வழங்கப்படும். இக்கட்டுரைப் போட்டியில் முஸ்லிம் அல்லாத ஆண்,பெண் இருபாலரும் பங்கு பெறலாம். வயது வரம்பு கிடையாது. நான்கு பக்கங்களுக்கு அதிகம் இல்லாமல் கட்டுரை இருக்க வேண்டும். சுய ஆக்கமாக இருக்க வேண்டும். கட்டுரை ஒரு பக்கம் மட்டுமே தெளிவாக எழுதப்பட வேண்டும். கட்டுரையை நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம். கட்டுரைகள் சேர்ப்பிக்க கடைசி வரும்31.8.2023. அனுப்ப வேண்டிய முகவரி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மறஹபா மொபைல்ஸ், பழைய பேருந்து நிலையம், திருத்துறைப்பூண்டி. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post சுதந்திர தினத்தை முன்னிட்டு தவ்ஹீத் ஜமாஅத் கட்டுரை போட்டி appeared first on Dinakaran.

Related Stories: