சுற்றுலா பயணிகளை கவரும் இத்தாலியன் பூங்கா

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள இத்தாலியன் கார்டனில் பாத்திகளில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகள் தற்போது பூக்க துவங்கியுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வருகின்றனர். ஊட்டியில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காக்களில் புதிய மலர் செடிகள் நடவு பணிகள், தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்தல், ரோஜா செடிகளை கவாத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து பூங்காகளில் மலர் செடிகள் பூக்க துவங்கி உள்ளன.

தாவரவியல் பூங்காவின் மேற்பகுதியில் இத்தாலியன் கார்டன் அமைந்துள்ளது. இதன் அருகில் பிறைநிலவு வடிவில் அல்லிகுளம் அமைந்துள்ளது. சிறிய சிறிய அலங்கார பாத்திகளில் பல்வேறு வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இவை தற்போது பல்வேறு வண்ணங்களில் பூக்க துவங்கியுள்ளன. இது மட்டுமில்லாமல் அழகிய ேவலைப்பாடுகளிடன் கூடிய யானை சிலை உள்ளது. இதன் முன்பு புகைப்படம் எடுத்து கொள்ளவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கோடை விழாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை இத்தாலியன் பூங்கா வெகுவாக கவரும் என எதிர்பார்க்கபடுகிறது.

Related Stories: