கல்லூரி மாணவி உட்பட 2 பேர் மாயம்

 

ஈரோடு,ஜூன்9: ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் வேட்டுவன்புதூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கண்ணுசாமி மகள் உதயநிலா(20). இவர், கடந்த 6ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடி பார்த்தும் உதயநிலா கிடைக்கவில்லை. இதுகுறித்து உதயநிலாவின் தாய் மணியாள் அளித்த புகாரின் பேரில் பங்களாபுதூர் போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல், கோபி வெள்ளாங்கோவில் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த குழந்தைவேல் மகள் ரித்திகா(19). இவர், பிளஸ் 2 படித்து விட்டு மெடிக்கல் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த 6ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள்,தோழிகள் வீடுகளில் தேடிபார்த்தும் ரித்திகா கிடைக்கவில்லை. அவரது தந்தை குழந்தைவேல் அளித்த புகாரின் பேரில் சிறுவலூர் போலீசார் ரித்திகாவை தேடி வருகின்றனர்.

The post கல்லூரி மாணவி உட்பட 2 பேர் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: