காப்பகத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை: பெண் காப்பாளர் போக்சோவில் கைது

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சுனாமியில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் தாய், தந்தையை இழந்த நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் தங்கி பயின்று வருகின்றனர். 20 குழந்தைகளுக்கு ஒரு காப்பாளர் என்ற அடிப்படையில் பெண் காப்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அங்குள்ள 12 வயது சிறுவனுக்கு பெண் காப்பாளர் சசிகலா (45), இரவு நேரங்களில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அந்த சிறுவன் காப்பக நிர்வாகிகளிடம் புகார் செய்தான். காப்பக நிர்வாகி புகாரின்படி வெளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, காப்பாளர் சசிகலாவை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

The post காப்பகத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை: பெண் காப்பாளர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: