ஒடிசா ரயில்கள் விபத்து எதிரொலி : கலைஞர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு!!

சென்னை : சென்னையில் இன்று மாலை நடைபெற இருந்த கலைஞர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்தாகியுள்ளது. ஒடிசா ரயில் விபத்து காரணமாக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடம், சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மட்டுமே நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா ரயில் விபத்தில் 200ற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 900 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post ஒடிசா ரயில்கள் விபத்து எதிரொலி : கலைஞர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: