பிரபல யூடியூபர் இர்பானின் கார் விடுவிப்பு: விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் உரிமம் ரத்து

சென்னை: தனியார் கல்லூரி பெண் ஊழியர் பலியான வழக்கில், பிரபல யூடியூபர் இர்பானின் கார் விடுவிக்கப்பட்டது. செங்கல்பட்டு அருகே, மறைமலைநகர் பகுதியில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன், பிரபல யூடியூபர் இர்பானின் சொகுசு கார் மோதி, தனியார் கல்லூரி ஊழியர் பத்மாவதி (55) பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக, பொத்தேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த காரை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு, இர்பானின் காரை போலீசார் பரிசோதனைக்காக எடுத்து வந்தனர். ஆனால், ஆர்.சி. புக், இன்சூரன்ஸ் மற்றும் லைசென்ஸ் போன்ற ஆவணங்களை, போலீசார் எடுத்து வரவில்லை. இதையடுத்து, அவரது கார் போலீசாரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.நேற்று போலீசார் அந்த காரை இர்பானின் உறவினரிடம் ஒப்படைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய அசாரூதினின் ஓட்டுநர் உரிமத்தை ஆர்டிஒ ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பிரபல யூடியூபர் இர்பானின் கார் விடுவிப்பு: விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் உரிமம் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: