சூதாடிய 6 பேர் கைது

 

சாத்தூர், மே 23: சாத்தூரில் பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். சாத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் போலீசார் நேற்று படந்தால் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் சுந்தர்(34), கருப்பசாமி(26), கருத்தபாண்டி (32), சத்தியமூர்த்தி(28), பொன்ராஜ்(26) மற்றும் பாலமுருகன் (28) ஆகியோர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சூதாடிய 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: