பைக்குகளுக்கு தீ வைத்த 2 பேர் கைது

கேடிசி நகர், மே 3: பாளை அருகே உள்ள சீவலப்பேரி சிவன் கோவில் தெற்குத் தெருவை சேர்ந்த ஆறுமுகத்திற்கு சண்முகையா ராஜா (24), அழகுராஜா (23) என இரு மகன்கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்துரையின் மகன் பட்டானி (24), செல்லத்துரை மகன் முருகன் (37). சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சண்முகையா ராஜா சாப்பிட சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பட்டானி அவருடன் தகராறில் ஈடுபட்டார். இதில் முன்விரோதம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சண்முகையா ராஜா வீட்டிற்கு சென்று பட்டாணியும், முருகனும் சேர்ந்து வீட்டு முன்பாக நிறுத்தி இருந்த பைக்குகளை தீ வைத்துள்ளனர். பின்னர், இச்சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீசில் சண்முகையா ராஜா புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு ெசய்த போலீசார், பதிந்து பட்டாணி மற்றும் முருகனை கைது செய்தனர்.

The post பைக்குகளுக்கு தீ வைத்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: