மே 1ம் தேதி டாஸ்மாக் லீவு

 

விருதுநகர், ஏப்.29: தொழிலாளர் தினமான மே 1ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப்எல் 1,2,3,3ஏஏ, 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை மே 1 ஒரு நாள் தற்காலிகமாக மூட வேண்டும். உத்தரவை மீறி செயல்படும் எப்எல்1,2,3,3 ஏஏ, 11 கடைகளின் உரிமதாரர்களின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

The post மே 1ம் தேதி டாஸ்மாக் லீவு appeared first on Dinakaran.

Related Stories: