கேரளாவில் மொபைல் போனில் வீடியோ பார்த்த சிறுமி: திடீரென்று செல்போன் வெடித்து சிதறியதால் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் மொபைல் போனில் வீடியோ பார்த்துக் கொண்டு இருக்கும் போது வெடித்து சிறுமி பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பழையனூர் பகுதியை சேர்ந்த சிறுமி ஆதித்ய ஸ்ரீ என்ற 8 வயது மாணவி மொபைல் போனில் வீடியோ பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடிரென்று மொபைல் போன் வெடித்து சிதறியுள்ளது. இதில் படுகாயமடைந்த ஆதித்ய ஸ்ரீ சம்பவ இடத்திலேயே இறந்து போனார். சிறுமியின் உடலைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி செல்போனில் வீடியோ பார்த்து கொண்டிருந்த போது, போன் சார்ஜில் போடப்பட்டிருந்துள்ளது. இந்த சமயத்தில் தான் செல்போன் வெடித்துள்ளது. செல்போன் வெடித்த சத்தம் அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் கேட்டுள்ளது. அந்தளவுக்கு வெடி குண்டு போல வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கேரளாவில் மொபைல் போனில் வீடியோ பார்த்த சிறுமி: திடீரென்று செல்போன் வெடித்து சிதறியதால் பலி appeared first on Dinakaran.

Related Stories: