×

கோடை விடுமுறை முன்னிட்டு வைகை அணையில் குவிந்த பயணிகள்

ஆண்டிபட்டி: கோடை விடுமுறையையொட்டி ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆனால் பூங்கா பகுதியில் பராமரி போதிய பராமரிப்பு இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டும், தமிழ்நாட்டில் கோடை விடுமுறையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதை தொடர்ந்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது.

சிறுவர்களும், குழந்தைகளும் ஊஞ்சல் ஆடியும், யானை சிலையின் தும்பிக்கையில் சறுக்கியும் மகிழ்ச்சியுடன் விளையாடினர். மேலும் அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் வீடுகளில் இருந்து விருப்பமான உணவுகளை சமைத்து கொண்டு வந்து, பூங்காவின் நிழற்பகுதிகளில் ஆங்காங்கே குழுவாக அமர்ந்து சாப்பிட்டனர். அதே நேரத்தில் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்ட புல்வெளிகள், அழகுசெடிகள் ஆகியவை கருகிய நிலையில் காணப்பட்டது. மேலும் பெரும்பாலான மின்விளக்குகள் உடைந்தும், செயற்கை நீர்ஊற்றுகள் அனைத்து செயல்படாமல் இருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதேபோல குடிநீர் உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததாலும் சுற்றுலா பயணிகள் பரிதவித்தனர்.

Tags :
× RELATED மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!