ஒட்டன்சத்திரம் தொப்பம்பட்டியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டியில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் பொருட்டு திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை நேற்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம் தொகுதி பொறுப்பாளர் ஜான், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பொன்ராஜ், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, ஒன்றிய தலைவர் சத்தியபுவனா, துணை தலைவர் தங்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன் மற்றும் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

The post ஒட்டன்சத்திரம் தொப்பம்பட்டியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: