×

பள்ளி மாணவர்களுக்கு பேன் பார்த்த குரங்கு

ரிஷிவந்தியம், மார்ச் 23: தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையொட்டி பள்ளி மாணவர்களுக்கு நேற்று விடுமுறை கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்துள்ள ஏந்தல் கிராமத்தில் மாணவர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஏந்தல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரது வீட்டில் அவரது மகன் அஸ்வின், உறவினர் மகள் சங்கமித்ரா ஆகியோர் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென அங்கு வந்த குரங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் சகஜமாக பழகி அவர்களுக்கு பேன் பார்த்தது. இதனை காண கூட்டம் கூடிய போதும், குரங்கு சிறிதும் அச்சமின்றி மாணவர்களை அழைத்து அவர்களது தலையில் பேன் பார்த்துக் கொண்டிருந்தது. இந்த காட்சியை அங்கிருந்த இளைஞர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில்  பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி
வருகிறது.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு