×

தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

சாயல்குடி: வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் வாரிசு வேலை வழங்கக் கோரி, தொழிலாளர்கள் நேற்று வேலைகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கத்தில் ஒன்றிணைந்த கூட்டு நிறுவனமான, தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும், 1,350 ஒப்பந்த பணியாளர்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்களும் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது உப்பு நிறுவனத்தில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக புதிய தொழிலாளர்களை சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் 40 வருடங்கள் வரை பணியாற்றி இறந்து போன, பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என கூறி, தொழிலாளர்கள் உப்பு நிறுவனத்தில் வேலையை புறக்கணித்து நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Tags :
× RELATED போலீஸ் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து