×

தூக்குபோட்டு வாலிபர் சாவு

விருத்தாசலம், மார்ச் 22: விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள விஜயமாநகரம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(28). இவரது மனைவி சுப(26). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று சிவனேஸ்வரன்(6), கபிலன் (4), சுகன் (2) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கார்த்திக் கோயம்புத்தூர் மாவட்டம் கிசாம்பாளையத்தில் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். அங்கு அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கார்த்தியின் மனைவி சுப, கார்த்திக்கை அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன் சுப  கோபித்து கொண்டு தனது தாய் வீடான உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.மாம்பாக்கத்திற்கு சென்று விட்டார். இதனால் விரக்தி அடைந்த கார்த்திக் கடந்த 19ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குடிபோதையில் இருந்த அவர் வீட்டில் உள்ள பேனில் புடவையால் தூக்கு மாட்டி கொண்டு இறந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு