×

ரேஷன் அரிசி, பருப்பு கடத்திய நபர் கைது

விருதுநகர், மார்ச் 21: விருதுநகரில் ரேஷன் அரிசி, பருப்பு கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரைட் மேரி தலைமையில் ரோந்து சென்றனர். அப்போது பர்மா காலனி பகுதியில் டூவீலரில் சென்ற பர்மா காலனியை சேர்ந்த சக்திவேல்(43) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் 50 கிலோ ரேசன் அரிசி, 20 கிலோ துவரம்பருப்பு கொண்டு செல்வது தெரிய வந்தது. இருசக்கர வாகனத்துடன் ரேசன் அரிசி, பருப்பை பறிமுதல் செய்து சக்திவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...