தொண்டி, மார்ச் 20: தொண்டி அருகே கடலில் மீன் பிடித்த மீனவர் தவறி விழுந்து பலியானார்.தொண்டி அருகே தாமோதிரன்பட்டினத்தை சேர்ந்த மாயபெருமாள்(54), நாகராஜன், கார்மேகம் ஆகியோர் நேற்று முன்தினம் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது மாயபெருமாள் மயங்கி கடலில் விழுந்துள்ளார். சக மீனவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பரிதாபமாக மீனவர் உயிர் இழந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தொண்டி மரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.