×

கல் குவாரிக்கு எதிராக வழக்கு

மதுரை, மார்ச் 19: விருதுநகரைச் சேர்ந்த நீதிராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அருப்புக்கோட்டை தாலுகா புலியூர் கிராமத்தில் அமைந்துள்ள புலியூர் கண்மாய் எங்களின் நீராதாரமாக உள்ளது. கண்மாயை ஒட்டிய பகுதியில் கல்குவாரிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. கண்மாயை ஆக்கிரமிப்பு குவாரிக்கு பாதை அமைத்துள்ளனர். அருகில் ரயில்வே கேட்டும் உள்ளது.

குவாரிக்கு அதிக எடையுள்ள கனரக வாகனங்கள் செல்வதால் பெரும் பாதிப்பாக உள்ளது. எனவே, குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர், சம்பந்தப்பட்ட பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கையளிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு