×

டன் கணக்கில் சிக்கிய பேசாளை மீன்கள்

ராமேஸ்வரம், மார்ச் 18:  மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்து திரும்பிய படகுகளில் டன் கணக்கில் பேசாளை மீன்கள் சிக்கியது. பாம்பனில் இருந்து நேற்று முன்தினம் ஏராளமான விசைப்படகுகளில் மீனவர்கள் மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடிக்க சென்றனர். இரவு முழுவதும் கடலில் மீன்பிடித்த மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். கரை வந்து சேர்ந்த படகுகளில் டன் கணக்கில் பேசாளை மீன்கள் சிக்கியிருந்தன. படகில் பிடித்து வரப்பட்ட மீன்களை பிளாஸ்டிக் கூடைகளில் அள்ளி கரைக்கு கொண்டு வந்தனர். பாம்பன் கடற்கரையில் ஏராளமான கூடைகளில் அடுக்கி வைக்கப்பட்ட பேசாளை மீன்களை வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ