விருதுநகர், மார்ச் 17: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு அளிப்பதற்கு ஏதுவாக இன்று அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வீட்டுமனை பட்டா வழங்க மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் இலவச வீட்டுமனை பட்டா கோரும் மனு மற்றும் உரிய ஆவணங்களை இணைத்து அளிக்கலாம். தகுதியின் அடிப்படையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.