×

கழிவுநீர் குழாய் பதிக்க கோரிக்கை

கீழக்கரை, மார்ச் 17: கீழக்கரையில் வடக்கு தெரு 7வது வார்டு உட்பட்ட பகுதியில் ரோடுக்கு மேலே தெரியும் அளவிற்கு கழிவுநீர் குழாய்கள் பதித்து இருப்பதால் உடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் நிரம்பி வழிகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் இரண்டு மாதம் காலமாக நகராட்சியில் இருந்து மேற்பார்வையாளர்கள் பார்வையிட்டும் எந்த தீர்வும் இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தேங்கிக் கிடக்கும் சாக்கடையின் மூலமாக துர்நாற்றம் வீசுவதுடன் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் சூழல் அதிகமாக உள்ளது.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சில இடங்களில் மட்டும் கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. பதிக்கப்படாத இடத்தில் குழாய் பதித்து ரோடு அமைத்து தருமாறு வலியுறுத்தி உள்ளனர் என்றனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு