சாயல்குடி, மார்ச் 17: முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தல் செல்வ விநாயகர், நீதியுடைய அய்யனார், மேல்கரை முனியப்பசாமி மற்றும் கிராம தேவதைகள், பரிவாரங்களுக்கு கும்பாபிஷேகம் கடந்த 45 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதற்கு மண்டல பூஜை விழா கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு வேள்வி பூஜைகளுடன் தற்போது நடத்தப்பட்டது.
பிறகு செல்வ விநாயகர், நீதியுடைய அய்யனார், மேல்கரை முனியப்பாசாமி உள்ளிட்ட சாமி சிலைகள், பரிவார, கிராம தேவதை சாமி விக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. பிறகு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நீர்கோழியேந்தல், ஆனைச்சேரி, மணலூர், மேலப்பனைக்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமமக்கள் கலந்து கொண்டனர்.