விருத்தாசலம், அக். 1: அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க கடலூர் மாவட்ட மாநாடு விருத்தாசலத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சங்கரய்யா வரவேற்றார். வழக்கறிஞர் அம்பேத்கர் கொடி ஏற்றி துவக்கி வைத்தார். மாநில துணை தலைவர் சங்கரன், மாநில செயல் தலைவர் கோதண்டம், மூத்த வழக்கறிஞர்கள் தில்லைவாணன், பூமாலைகுமாரசாமி, பாலச்சந்தர், விஸ்வேஸ்வரன், செல்வபாரதி, இளையராஜா ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்ற வகையில் அட்வகேட் புரடொக்க்ஷன் பில் 2021ஐ உடனடியாக சட்டமாக்க வேண்டும். அகில இந்திய பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் சேம நல நிதியை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்திட வேண்டும்.
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கிட வேண்டும். கடலூர் மாவட்டத்தில் நீதிபதி காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். விருத்தாசலம் நீதிமன்றத்தில் கிளை அஞ்சலகம் திறந்திட வேண்டும். விருத்தாசலம் நீதிமன்றம் முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் ஊக்க தொகையை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் 25 பேர் கொண்ட மாவட்ட குழு அமைக்கப்பட்டது. ராஜ்மோகன் நன்றி கூறினார்.விருத்தாசலம் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் குபேரமணி, அரிகிருஷ்ணன், பிரகாஷ், சரத்குமார், ரேவதி ஜெய, மகாலட்சுமி, காயத்ரி, திவ்யா, ஷாஜி உள்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.