கறம்பக்குடி அரசு தொடக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

கறம்பக்குடி,அக்.1: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் உள்ள அனுமார் கோயில் அரசு தொடக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. அரசு உத்தரவின்படி நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் விஸ்வாசம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் இல்லம் தேடி கல்வி அதன் நடைமுறைகள் செயல்படும் விதம் பற்றியும் பள்ளி உட்கட்டமைப்பு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் நலன் பற்றியும் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் ஆகிய பல்வேறு தலைப்புகளில் கருத்துக்கள் எடுத்துறைக்க பட்டு விரிவாக கலந்து ஆலோசிக்க பட்டு இறுதியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இப்பள்ளி மேலாண்மை கூட்டத்தில் பேரூராட்சி அப்பகுதி வார்டு கவுன்சிலர் ராஜா, விரிவுரையாளர் தனசேகர், பள்ளி மேலாண்மை குழு தலைவி சித்திரா, ஆசிரியர்கள் செல்வராணி, கமலக்கண்ணன் சத்துணவு அமைப்பாளர் குமார், தன்னார்வலர்கள் பிரிய தர்ஷினி ஆர்த்தி, சித்திரா, பள்ளியின் சிறப்பு மைய ஆசிரியை ஜோதி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மாணவ மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: