திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையினால் கொள்ளிடம்,காவிரியில் நீர்வரத்து அதிகமாகி நெல்,வாழை,கரும்பு போன்ற பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மின்சார திருத்த சட்டத்தை பெற வேண்டும். யூரியா,டிஏபி,பொட்டாஷ் போன்ற உரங்கள் கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கு தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.