வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிடங்கில் கலெக்டர் ஆய்வு தேர்தலின்போது பயன்படுத்தப்பட்டது

வேலூர், அக்.1: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு அதற்கான கிடங்கில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த அறைகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு செய்யப்படுகிறது. அதன்படி நேற்று காலை வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளில் ஆய்வு மேற்கொண்டார். இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ., தேமுதிக உட்பட முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: