தூத்துக்குடி,அக்.1: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் கீதாஜீவனுக்கு இன்று(1ம் தேதி) வரவேற்பு அளிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமைக்கழகத்தால் புதியதாக நியமனம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு இன்று (1ம் தேதி) சென்னையில் இருந்து தூத்துக்குடி வரும் அமைச்சர் கீதாஜீவனுக்கு மாநகர திமுக சார்பில் தூத்துக்குடி எப்.சி.ஐ குடோன் அருகே இன்று காலை 7மணிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திமுகவினர் அனைவரும் தவறாமல் பங்கேற்றிடவேண்டும் என்று மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.