ராதாபுரம், அக். 1: ராதாபுரம் யூனியனுக்குட்பட்ட கிராமங்களின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட பஞ். தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை வகித்தார். யூனியனுக்குட்பட்ட மாவட்ட கவுன்சிலர்கள், யூனியன் கவுன்சிலர்கள், பஞ். தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கிராமங்களின் குடிநீர் பிரச்னை தொடர்பாக விவாதிக்கப்பட்டு அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும். கிராமங்களில் குடிநீர் பிரச்னை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட சேர்மன் விஎஸ்ஆர் ஜெகதீஷ் உறுதி அளித்தார்.