108 கிலோ புகையிலை பறிமுதல்

மார்த்தாண்டம்,அக்.1 :மார்த்தாண்டம் போலீஸ்  சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் மார்த்தாண்டம்  ஜங்சன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பைக்கில்  வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். இதில் அவர் படந்தாலுமூடு பரமன்விளை  பகுதியை சேர்ந்த சுரேஷ் (47) என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம்  சோதனை நடத்தியபோது சுமார் 108 கிலோ புகையிலை பொருட்களை மறைத்து  வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை  கைது செய்த போலீசார்,  அவரது பைக்கையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார்  சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Related Stories: