வத்திராயிருப்பு, அக். 1: வத்திராயிருப்பு அருகே, ஜெயந்த் நகரைச் சேர்ந்த மலைவாழ் மக்கள், வனத்துறை கட்டுப்பாடுகளை கண்டித்து கோவிலாறு அணைப்பகுதியில் குடியேறியுள்ளனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, பிளவக்கல் அணையில் பட்டுப்பூச்சி நகர் உள்ளது. இதன் அருகே உள்ள ஜெயந்த் நகரில் 15க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கிடைக்கும் இன்டன் மரப்பட்டை, நெல்லிக்காய், தேன், நன்னாரி, கடுக்காய், துளசி, ஆவாரம்பூ உள்ளிட்ட 15 வகையான மூலிகைப் பொருட்களை சேகரித்து விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.