சிவகாசி, அக். 1: சிவகாசி மாநகராட்சியில் 1 மற்றும் 2வது மண்டலத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என, திருத்தங்கல் பகுதி கவுன்சிலர்கள் ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் அளித்தனர். இதையடுத்து தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் நிலுவை வழங்கப்பட்டது. சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதியில் 1 மற்றும் 2வது மண்டலத்தில் தினக்கூலி அடிப்படையில் 60க்கும் மேற்பட்ட டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், இரண்டு மாதங்களுக்கு முன் சம்பளம் வழங்காததை கண்டித்து, திருத்தங்கல் மண்டல அலுவலகத்தில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.